சனி, 2 மே, 2009

உலகின் இரண்டாவது மிகப் பெரிய தேர்தல்

நிஜங்கள்க செய்திப்பக்கம் 2 மே - 2009


பாராளுமன்றத்தேர்தல் 2009உங்கள் ஓட்டு!!?


அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியதேசத்தை வழி நடத்தி வெற்றிப்பாதையில்பயணிக்க வைக்கக்கூடிய கூட்டணியைஒட்டுமொத்த இந்திய குடிமக்களும்தீர்மானிக்க வேண்டிய காலகட்டம்.நாட்டுமக்களின் தேவைகளை சேவையாய்நிறைவேற்றித் தரக்கூடிய எம்.பிகளையும்,மந்திரிகளையும் தேர்ந்தெடுக்க ஒவ்வொருகுடிமகனுக்கும் கொடுக்கப்படும் வாய்ப்புநிறைந்த தேர்தல் நேரமிது.
ஓட்டுப்பெட்டிகளிலும், ஓட்டுச்சாவடிகளிலும்உள்ள ஓட்டைகளை அடைத்து பலத்தபாதுகாப்புகளுக்கு இடையே தேர்தலைஅசம்பாவிதங்கள் எதுவும் நிகழ்ந்துவிடாமல்நடத்தி முடிக்க வேண்டும் என்ற பயம்கலந்த எதிர்பார்ப்புகளுடன் அரசின்அனைத்து துறைகளும் இரவு பகலாய்பணிகளை செய்ய ஏவப்பட்டுள்ளன..!
ஒவ்வொரு கட்சியும் தங்களின்செல்வாக்கு மிகுந்த கோட்டைகளாககாட்சிதரும் தொகுதிகளைதொலைத்துவிடாமல் இருப்பதற்கு படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்ததேர்தல் வெற்றியோடு விடைபெற்று வீதிக்கேவராத வேட்பாளர்கள் முதல் அதிகாரத்திற்குஆசைபடும் புதிய வேட்பாளர்கள்வரை கூரைவீடுவரை வந்து கூழை கும்பிடுயிட்டு ஒருஓட்டிலாவது ஜெயிக்கவேண்டும் என்றகனவுகளோடு தனது ஆள், பண பலத்தைஅள்ளி வீசி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துஆ(ட்)டி பார்க்க அலை மோதிக்கொள்கிறார்கள்..!
தேர்தலுக்காக இந்திய அரசியல்சட்டத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டசெலவுத்தொகை 30 கோடிகளாகும்!.இந்தியத் தேர்தல்களை ஐரோப்பியநாடுகளில் நடைபெறுகின்ற நாடாளுமன்றதேர்தல்களோடு ஒப்பிடும் போது உலகின்இரண்டாவது பெரிய தேர்தலாககருதப்படுகிறது. மக்களின் வரிப்பணத்தில்கோடிகளை முடக்கி நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த தேர்தல்களில்தான்நமது தேசம் காக்க போட்டியிடும்தலைவர்களின் பிரச்சார யுக்திகள் இப்படிஇருக்கின்றன.
நாட்டின் பிரதம வேட்பாளர்கள்முதல், புதிய வேட்பாளர்கள் வரைஅனைவரும் மக்களின் தேவை, நாட்டின்வளர்ச்சி, எதிர்கால திட்டம் நாட்டில் எங்கும்பரவிவரும் பட்டினிச்சாவு, கல்வியின்மை,வறுமை, வேலையின்மை, சீர்கெட்டு வரும்கலாச்சாரம், சுகாதாரம், இந்தியகுடிமகன்களின் மேல் சுமத்தப்பட்டுள்ளகடன்கள் போன்றவற்றை தீர்ப்பதற்குண்டானதிட்டங்களைக் கூறி பிரச்சாரம் செய்வதைவிட எதிர் கூட்டணி வேட்பாளர்களைவிமர்சித்து பிரச்சாரம் செய்வதையேவாழையடி வாழையாக செய்து வருகின்றன.
நாட்டின் மூன்றாவது து}ண் எனவர்ணிக்கப்படும் பத்திரிக்கைத் துறையோஅரசியல் வாதிகளின் சுயரூபங்களைஅம்பலப்படுத்தி அடுத்து ஆளவருபவர்களைஅடையாளம் காண உதவ வேண்டியவர்கள்அவர்களின் அடிவருடிகளாகவேமாறிப்போயின. அவர் பலகீனமானவர், இவர்இரும்பு மனிதர், அவர் வெளிநாட்டைசார்ந்தவர், பாபர் மசூதியை இடித்தவர்கள்,ராமர் பாலம் காத்தவர்கள், அணுசக்தியைஆதரித்தவர்கள், எதிர்த்தவர்கள்,ஈழத்திற்காக குரல் கொடுத்தவர்கள்,சிறுபான்மையின் பாதுகாவலர்,பெரும்பான்மையின் கதாநாயகன். என்றுகருவாட்டுக்கடை சந்தையாய் காட்டுக்கூச்சலிடும் இவர்களின் அதிகார போதைதலைக்கேரி கையை வெட்டு, ரோடுரோலரால் நசுக்கு என்ற கொலை வெறிப்பேச்சுக்களைத்தான் பிரச்சாரத்தின் முக்கியசாராம்சமாக காண முடிகிறது.
தேசத்தின் உச்சபட்சசட்டத்தொகுப்பே இந்திய அரசியலமைப்புசட்டமாகும். அதனை நவம்பர் 26, 1949ல்அறிமுகப்படுத்தப்பட்டு ஜனவரி 26, 1950 முதல்நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது. இதன்நோக்கம் இந்தியாவின் அடிப்படை அரசியல்கொள்கைகள், கட்டமைப்பு அதிகாரங்கள்,மற்றும் அரசின் கடமைகளை நிர்ணயம்செய்து அதன் மூலம் நாட்டில் வாழும்ஒவ்வொரு குடிமகனுக்கும் சமமானஅடிப்படை உரிமைகளை வழங்கவேண்டும்என்பதே. இதன் காரணமாகவே நமதுதேசம் வேற்றுமையில் ஒற்றுமை கொண்டஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவிளங்குகிறது. இதற்கு வலு சேர்க்கும்விதமாக 1976-ல் நடைபெற்ற அரசியலமைப்புச்சட்ட திருத்தங்களில் இந்தியா கடைபிடிக்கும்மூன்று முக்கியக் கொள்கைகளாகபொதுவுடைமை, சமயசார்பின்மை, மற்றும்நேர்மை ஆகியவற்றை அறிவித்தது.சட்டங்களை இயற்றும் சபைக்குசெல்லத்துடிக்கும் இன்றைய அரசியல்கட்சிகள் நாட்டின் உயிரான இந்த மூன்றுகொள்கைகளையும் சட்டக்கிடங்கிலேயேசாவடித்து வைத்துள்ளனர். அதுமட்டுமின்றிஅந்தக் கொள்கைகளுக்கு நேரெதிர்செயல்பாடுகளை அரங்கேற்றுவதில் போட்டிபோட்டு முன் நிற்பதை காணமுடிகிறது.
சுதேசி பற்றி பேசும் பி.ஜே.பி-யினர்தான்பொதுவுடைமையை தனியார் மயமாக்கஅருண்சோரி தலைமையில் ஒருஅமைச்சரவையையே உருவாக்கி நாட்டுமக்களை அதிரவைத்தனர். அதன் மூலம்பொதுவுடைமை விற்பனை நிலையத்தைதிறந்து வைத்து ஏலம் விட்டபெருமைக்குரியவர்கள். இதில் தான்லாபத்தைக் கொட்டிக் கொடுத்துக்கொண்டிருந்த பி.எஸ்.என்.எல். கூடதனியார் மயமானது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து ஆட்சியைத்தொடரவந்த காங்கிரஸ{ம் தனது பங்கிற்குஎல்.ஐ.சி, ஸ்டேட் பேங்க், தேசியஇன்சூரன்ஸ் போன்ற நிறுவனங்களையும்மற்றும் அரசிற்கு இலாபம் தரும் இதரநிறுவனங்களையும் பங்குச் சந்தைநிறுவனத்தில் பணையம் வைத்த பெறுமைகாந்திய வாதிகளையே சாரும்.சமயசார்பின்மை என்ற தேசத்தின்இரண்டாவது கொள்கைக்கு நேர் எதிர்கொள்கையையே தனது கொள்கையாககொண்டு களமிறங்கியவர்கள் பி.ஜே.பிவகையராக்கள். அதனை மேலும்உண்மைபடுத்தும் வண்ணம் தற்போதையதேர்தலில் அக்கட்சியின் வாக்குறுதியில்முதன்மையாக பாபர் மசூதியை இடித்தஇடத்தில் ராமர் கோயில் கட்டியே தீருவோம்என்று இந்தியாவின் இறையாண்மைக்குஎதிராக பகிரங்கமாக அறிவித்து தனதுஇந்துத்துவா காவிச் சாயத்தை மதப்பற்றாகமாற்ற முயற்சிக்கிறார்கள்.
இந்த விஷயத்தில்காங்கிரசும் விதிவிலக்கல்ல.தனது ஓட்டு வங்கி பாதித்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களும்இதனை நாட்டின் இறையாண்மைவிஷயமாகப் பார்க்காமல் சமயம் சார்ந்தவிஷயமாக கருதுவதால்தான் இதுவரைஅதனை தீர்ப்பு எழுதாத பிரச்சினையாகஇழுத்துச் செல்கிறார்கள். இதில் இன்னும்கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்முதலில் சர்ச்சைக்குரிய இடம் என்றுசொல்லியும், எழுதியும் வந்த ஊடகங்கள்ஆண்டுகள் நகர நகர ராமர்கோயில் என்றேஎழுதத் தொடங்கிவிட்டன. இப்போதுசர்ச்சைக்குரிய இடம் என்பது ஊடகங்களில்மறைந்தே போனது.
நாட்டின் பாதுகாப்பு சக்தியாகவிளங்கும் ராணுவத்திற்கு வாங்கியஆயுதங்கள், கருவிகள்,போர்த்தளவாடங்கள், அரசு கட்டிடங்கள்என அனைத்திற்கும் ராமாயண,மகாபாரதத்திலிருந்த சமஸ்கிருதப் பெயர்களேவைக்கப்படுகின்றன. உதாரணமாகரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்ட டீ-90 ரக போர்டாங்குகளுக்கு பீஷ்மர் என்று பெயர்வைத்தார்கள். அரசு அலுவலகங்களில்வெள்ளிக்கிழமைகளில் பஜனைகள்ஒலிக்கின்றன. சமீப காலமாக ஆயுதபூஜைகள் அரசு விழாக்களைப் போல்கொண்டாடப்படுகிறது. எங்கே இருக்கிறதுமதச்சார்பின்மை? நாட்டையே நாசப்படுத்திக்கொண்டிருக்கும் இந்த நோய் தற்போதுநீதித்துறை வரை தனது பிடியைநீட்டியுள்ளது.
ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி பகவத்கீதைதான் நாட்டின் தர்ம நியாயச் சட்டமாகஇருக்க வேண்டும் என்று கொக்கரிக்கிறார்.கருப்புக் கோட்டுக்குள் காவியைக் கொண்டமார்கண்டேய கட்ஜீ தாடியும், பர்தாவும்தாலிபனிஸம் என பரபரப்பு தீர்ப்பளித்துதனது அரிப்பைத் தீர்த்துக் கொண்டார்.தாடியை வம்புக்கு இழுத்து சீக்கியமக்களையும் சிக்கலில் மாட்டிவிட்டுள்ளார்.இப்படியாக நாட்டின் மதச்சார்பின்மைஎன்பது எல்லா நிலையிலும், துறையிலும்மண்ணறையை நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருக்கிறது.
அரசியல் சட்டத்தொகுப்பில்மூன்றாவது கொள்கையாக உள்ள 'நேர்மை"அரசியல் வாதிகளின் அகராதியிலேயேஇல்லாத ஒரு வார்த்தையாக அவர்களுக்குதெரிகிறது. தேர்தல் நேரங்களில் கரைபடாதகரத்திற்கு சொந்தக்காரர்களாக வலம் வரும்இவர்கள் தெருக்கோடியில் இருந்துபலகோடிகளுக்கு அதிபதிகளாக தங்களைமாற்றியதை மக்கள் மறக்கமாட்டார்கள்.இன்றைய தினம் நேர்மையான ஒருதலைவரை காட்டுங்கள் என்றால் அவர்கள்கல்லறைக்குதான் அழைத்துப் போவார்களேதவிர தனித்துவமிக்க தலைவரை காண்பதுஎன்பது மிகவும் அரிதான விசயமாகவேமாறிப்போனது. அதனால் தான் நடைமுறைவாழ்க்கை ஓட்டத்தில் எதையாவது மாற்றிப்பேசினால் அல்லது திரித்து கூறினால்எதிர்காலத்தில் அரசியல் தலைவராகிவிடுவாய்என்று கேலி செய்யும் அளவிற்கு இன்றையஇந்திய அரசியலின் நிலைமை உள்ளது.இன்றைய அரசியல் கட்சிகளின்நேர்மையை பட்டியல் போட்டால் அதுநிஜங்களாய் நீண்டு கொண்டே போகுமேஅல்லாது நிறுத்த முடியாது. ஆனாலும் ஓரிருவிஷயங்களையாவது உரசிப் பார்த்தேஆகவேண்டும். மேற்கத்திய கலாச்சாரம்இந்திய கலாச்சாரத்தை சீரழிப்பதிலிருந்துகாக்க புறப்பட்டதாக காட்டிக்கொள்ளும்சங்பரிவாரத்தின் குழந்தை பி.ஜே.பி.யின்எம்.பி. பாபுபாய் கத்தாரா அடுத்தவன்மனைவியை தன் மனைவி என்று கூறிவெளிநாட்டுக்கு அழைத்துப்போக முயன்றநேர்மைவாதி. கிலோ கணக்கில் போதைபொருளோடு பிடிபட்ட ராகுல் மஹாஜன்,ஒரிசாவில் பாதிரியார்களை உயிரோடுஎரித்தவர்கள், குஜராத்தில் ஒருசமூகத்தையே திட்டமிட்டு கொன்றகொலைகார கும்பல். குஜராத்தைப் பற்றியநாடாளுமன்ற விவாதத்தின் போதுபி.ஜே.பி.யின் இராணுவ அமைச்சர் ஜார்ஜ்பெர்ணான்ட்ஸ் 50 ஆண்டுகளில் நடக்காததாநடந்து விட்டது. இதனைப் பற்றி பேசி நமதுநேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றுநஞ்சைகக்கிய நேர்மைவாதி. அதுமட்டுமின்றிஇந்தியாவில் முதன்முதலில் அரசியல்தலைவர் மீதான படுகொலை தாக்குதல்நடத்திய பெருமை பி.ஜே.பியின் தலைமைபீடமான ஆர்.எஸ்.எஸ்-யையே சாரும்.தேசத்தின் தந்தையென போற்றப்படும்காந்தியை முஸ்லிம் வேடமணிந்து கொன்றகோட்சேயின் வாரிசுகள்தான் இவர்கள்.இதன்மூலம் இந்து, முஸ்லிம் ஒற்றுமையைகுலைக்கக் கூடிய சதித்திட்டத்தை 1948ஜனவரி-30லேயே அறங்கேற்றியநேர்மைவாதிகள்.
காங்கிரசோ.. இந்தியா கண்ட முதல்பிரதமர் நேரு கொண்டு வந்த அணிசேராகொள்கைக்கு எதிராக அமெரிக்கா அணிகள்கொண்டுவந்த ஈரானுக்கு எதிரானபொருளாதார தடைக்கு தோள் கொடுத்துஆதரவு கையொப்பமிட்டு தனது நேர்மையைநிலைநாட்டியவர்கள். அணுசக்தி ஒப்பந்தம்என்ற அமெரிக்க அடிமைசாசனத்திற்குகையெழுத்து போட்டு நிறைவேற்றியவர்கள்.இவர்களும் பி.ஜே.பிக்கு சற்றும்சளைத்தவர்களல்ல என்பதை 1984ல்அக்டோபர் 31 இந்திராகாந்தி படுகொலைக்குபகரமாக சீக்கியர்களுக்கு எதிரானகொலைவெறித் தாண்டவத்தை முன்னின்றுநடத்திய நேர்மைவாதிகள். சமீபத்தில்இஸ்ரேலிடமிருந்து ஆயுதம் வாங்கியதில்630கோடி லஞ்சம் வாங்கிய வழக்குபாதுகாப்பு அமைச்சர் மீது பாய்ந்துள்ளது.உழுபவனுக்கு நிலம் என்றகோசத்தை முன்வைத்து உழுபவர்களின்உழைப்பில் வளர்ந்த கம்யூனிஸ்ட் மேற்குவங்கத்தில் முதலாளித்துவத்திற்கு ஆதரவாகநானோகார் தொழிற்சாலைக்காக சிங்கூரிர்விவசாயிகளிடம் விளைநிலத்தை பிடுங்கிபிரச்சனை ஏற்படுத்திய நேர்மைவாதிகள்.அது போன்றே நத்தி-கில் சுவர்கோ மகன்சலீம் குரூப் இரும்பு ஆலை திறப்பதற்காகவிவசாயிகளின் நிலத்தை அபகரித்தநேர்மைவாதிகள். தேசியக் கட்சியானாலும்,மாநிலக் கட்சியானாலும் அரசியல் சட்டத்தின்முத்தாய்ப்பான இந்த மூன்றுகொள்கைகளையும் முடிந்தவரைபுறந்தள்ளியே செயல்படுகின்றன.ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயஇயக்கமும் முழங்காலிட்டு ஆதரவுகொடுக்கும்தி.மு.க அரசு அண்ணாவின் நினைவுநாளில்ஒரு முஸ்லிமும் விடுதலைஅடைந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும்கருத்துமாக இருந்து தனது நேர்மையைநிரூபித்தது. நவீன ஜா(டா)ன்சி ராணியானஜெயலலிதாவோ கரசேவைக்கு ஆள் அனுப்பிகாவிக்கு தனது நேர்மையை கடமையெனசெய்தது. ஒட்டுமொத்த அரசியல்கட்சிகளும்,தேசத்தின் கொள்கைக்கு கொடுத்தமுக்கியத்துவத்தை விவரித்துக் கொண்டேபோகலாம். ஆனாலும் நமது தேசம்மறப்போம்..மன்னிப்போம் என்ற அரசியல்கோசத்தையே தனது கோசமாககொண்டுள்ளதோ என்னவோ மீண்டும்அவர்களே ஆட்சியைப் பிடிக்க பள்ளிக்குழந்தைகள் ஆசிரியரிடம் கிள்ளிவிட்டான்,அடித்துவிட்டான் என்று புகார் செய்வதுபோன்று பலஹீனமானவர், பயங்கரமானவர்என்று மக்களின் முன்னிலையில் ஒருமாயத்தோற்றத்தை உருவாக்கிமக்களவையை நிரப்ப நிற்கிறார்கள்.மக்களோ ஒவ்வொரு தவறுக்கு பிறகும்நிகழும் அடுத்த பெரிய ஊழலோ, குண்டுவெடிப்போ, ஒப்பந்தமோ, கலவரமோ வந்துவிட்டால் முந்தைய நிகழ்வுகளை நினைத்துக்கூடப்பார்ப்பதில்லை.இதுவரை மேலே பார்த்து வந்தநிகழ்வுகள் எல்லாம் எல்லாநடுநிலையாளர்களும் கண்டித்ததும்நடக்கத்தான் செய்தது. ஆனாலும் தேர்தல்களம் வரும் போது வேறென்ன செய்யமுடியும். யாருக்காவது ஓட்டுப்போட்டுத்தானே ஆக வேண்டியுள்ளது என்றுஅப்போதைக்கு அவர்களில் யார்மதசார்பின்மையோ, யார் தனக்கு இடஒதுக்கீடோ, பண ஒதுக்கீடோ, சீட்ஒதுக்கீடோ தருகிறார்களோ அவர்களைதேர்ந்தெடுக்க வேண்டிய காலக்கட்டாயம்வந்துள்ளது.
தேசத்தின் அடிப்படை அரசியல்கொள்கையை நடைமுறைப்படுத்தமுடியாதவர்கள் இன்று மக்கள் முன்னிலையில்வெளிநாட்டு வங்கி பணத்தை கொண்டுவருவோம். நாட்டை பயங்கர வாதத்தில்இருந்து பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தின்மூலம் தேசத்திற்கு எந்த பிரயோஜனமும்விளைந்து விடப்போவதில்லை.நாம் இயற்றிய சட்டங்களை நாமேநடைமுறைப்படுத்த முடியாத நிலைஇதைவிட அவமானம் இந்த தேசத்திற்குவேறென்ன இருக்க முடியும். தேர்தல்நிலைப்பாட்டில் முழு அதிகாரம் படைத்ததேர்தல் ஆணையமோ அதிகாரவர்க்கத்தின்ஆணைகளுக்கு முன்னால் பலஹீனப்பட்டுகிடக்கின்றது. எனவே எழுதப்பட்டசட்டங்களை நடைமுறைப்படுத்தி தேசத்தைவளர்ச்சிப்பாதையில் பயனிக்க வைக்கவேண்டிய மாற்றத்தை மக்களில் இருந்துதான்துவங்க வேண்டும். மக்களை சந்திக்காமல்யாரும் மக்களவைக்குள் போக முடியாது.எனவே இந்த தேசத்தின் நலன் ஜனங்களின்கைகளிலேயே உள்ளது கட்சிகளுக்குள்கட்டுண்டு இருக்காமல் தேசத்தின் நலம்பேண வேண்டியது ஒவ்வொரு இந்தியக்குடிமகனுக்கும் உள்ள பொறுப்பு ஆகவேஉங்கள் வாக்கை யார் உறுதியாகசட்டத்தைபின்பற்றி நடைமுறைப்படுத்துகிறார்களோ அவர்களையேதேர்ந்தெடுப்பதாய் அமைய வேண்டும்.மேற்சொன்ன அரசியல் சாசன சட்டத்தைநடைமுறைப் படுத்தாமையால் அதிகம்பாதிப்படைந்தவர்கள் சிறுபான்மைசமூகம்தான். எனவே முதலில் மாற்றத்திற்குவித்திட வேண்டியவர்கள் நீங்கள்தான்.ஆகவே இன்றைய சிறுபான்மை சமூகம்ஒன்றுபட்டு தேர்தல் களங்களை எதிர்கொள்ளக்கூடிய மாற்றம் வருமெனில் நீங்கள்ஆதரவு கொடுத்து வந்த நிலை மாறிஉங்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டுஆதரவை அல்ல கூட்டணியை கேட்டுவரக்கூடிய நிலை அருகிலேயே இருக்கிறதுஇன்ஷா அல்லாஹ்…
-அபு ஆஃபியா


நன்றி : நிஜங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக