வெள்ளி, 15 மே, 2009

ஸ்டார் வேட்பாளர்கள் நிலவரம்

தேர்தல் முடிவுகள் : ஸ்டார் வேட்பாளர்கள் நிலவரம்
திருப்பதியில் சிரஞ்சீவி முன்னிலை

குஜராத், காந்தி நகரில் பாஜக பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி முன்னிலை

உ.பி. ரேபரேலியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலை

பீகார் சரணில் ராஷ்டிரீய ஜனதா கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பின்னடைவு

* பிலிபிட்டில் பிஜேபியின் வருண் காந்தி முன்னிலை

ஆஜ்மீரில் காங்கிரஸின் சச்சின் பைலட் முன்னிலை

பிஜேபியில் ஜஸ்வந்த் சிங் டார்ஜிலிங்கில் முன்னிலை

* அமேதியில் ராகுல் காந்தி முன்னிலை

* திருவனந்த புரத்தில் சசிதாரூர் முன்னிலை

* மதுரையில் அழகிரி முன்னிலை

* பெங்களூரியில் குமாரசாமி முன்னிலை

ஜெயிக்கப் போவது யாரு ?

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள வேண்டுமா
அதே ஆர்வத்துடன் இங்கே சொடுக்குங்கள்


http://www.eciresults.nic.in/frmCountryWideWinningLeading.aspx
http://www.vikatan.com/vc/2009/jan/vc.asp

வியாழன், 14 மே, 2009

Scholarship பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக




இணையதள முகவரி: http://www.educationsupport.nic.in/





மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் உண்டாக்கியுள்ள தளமிது. இந்தியாவில் உள்ள மாணவர்கள் உதவித்தொகை (Scholarship) பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக இந்த இணையதளம் உருவாக்கப் பட்டுள்ளது. அரசு மட்டுமின்றி தனியார் துறை வழங்குகின்ற உதவித்தொகை பற்றிய தகவல்களும் இதற்குள் அடங்கும். பள்ளிபடிப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை பல்வேறு உதவித்தொகைகள் கிடைக்கின்றன. கலைக்கல்லூரி படிப்புகள், மருத்துவம், பொருளாதாரம், புள்ளியியல் படிப்புகள் என எல்லா துறை படிப்புகளுக்கும் உதவித்தொகை கிடைக்கிறது. இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பா, அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளிலும் படிக்க கிடைக்கும் உதவித்தொகை பற்றிய தகவல்களையும் அறியலாம். உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன சான்றிதழ்களை வைக்கவேண்டும், கடைசித் தேதி போன்ற தகவல்களும் இந்த இணைய தளத்தில் உண்டு. கல்விகடன் கொடுக்கும் வங்கிகள், கடனை பெறும் முறை போன்ற தகவல்களையும் கொடுத்துள்ளனர். கல்வி சம்பந்தமான முக்கிய தகவல்கள், வெளியீடுகளும் இங்கு பார்க்கலாம். கல்வி கற்கும் அனைத்து பிரிவினரும் தெரிந்து கொண்டு, பயன்பெற வேண்டிய இணையதளம்.



இணையதள முகவரி: http://www.educationsupport.nic.in/



நன்றி : சாதிக்.

இப்படியுமா ..............?

எப்படி எல்லாம் சிந்திக்கிறாங்கன்னு பாருங்களேன் .....



இப்படி ஒரு காலம் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்க்கில்லை




வியாழன், 7 மே, 2009

மகத்தான நற்பாக்கியங்கள்


மகத்தான நற்பாக்கியங்கள்

1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்
2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.
3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.
4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை மனனமிட்டால் தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற்று விட்டார்.
5) எவர் கடமையான தொழுகைகளுக்கு முன் பின் உள்ள பன்னிரண்டு ரக்அத் சுன்னத்தை தொழுது வருவாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகின்றான்
6) எவர் நபியின் மீது ஒரு தடவை ஸலவாத்துச் சொல்வாரோ அல்லாஹ் அவருக்கு பத்து முறை அருள் புரிகின்றான்
7) எவர் மஸ்ஜிதுக்கு செல்வாரோ அல்லது மஸ்ஜிதில் இருந்து திரும்புவாரோ மஸ்ஜிதுக்கு செல்லும் போது அல்லது திரும்பும் போது வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் சுவர்க்கத்தில் அந்தஸ்துகள் உயர்த்தப்படும்.
8.) அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்களை எவர் மனனமிடுவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.
9) எவர் கடமையான தொழுகையின் பின் ஆயதுல் குர்ஸியை ஓதி வருவாரோ அவருக்கு சுவர்க்கம் நுழைவதற்கு மரணத்தை தவிர வேறெதுவும் தடையாக இருக்காது.
10) எவர் அழகான முறையில் ஒழுச் செய்து பிறகு ஜும்ஆவுக்கு வந்து மொளனமாக செவி தாழ்த்தி உரையை செவிமடுப்பாரோ அவரது ஜும்ஆவுக்கு இடைபட்ட பாவங்களும், மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்படும்.
11) எவர் உறவினர்களுடன் சேர்ந்து வாழ்கின்றாரோ அல்லாஹ் அவரது ரிஸ்கை விஸ்தீர்ணப்படுத்துவதோடு, அவரது ஆயுளையும் நீட்டுகிறான்.
12) எவர் தனது சகோதர முஸ்லிமுக்கு மறைவில் பிரார்த்திக்கின்றாரோ அவருக்காக ஒரு வானவர் மறைவில் சாட்டப்பட்டு ஆமீன் கூறுவார். உமக்கும் அதே போன்று என கூறுவார்.
13) எவர் பாங்கின் பின் ‘அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித்ஃவதித்தாம்மா வஸ்ஸலாதில் காஇமா ஆதி முஹம்மதல் வஸீலத வல்பழீலத வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதல்லதி வஅத்தஹு’ என்று ஓதுவாரோ அவருக்கு மறுமையில் நபிகளார் (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்கும்.
14) எவர் அவையில் அமர்ந்து அதன் இறுதியில் அந்த அவையை விட்டு எழுந்து செல்வதற்கு முன் ‘ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்தஅஸ்தஃபிருக வஅதூபு இலைக்’ என்று ஓதவாரோ, அவர் அவையில் இருக்கும் போது நிகழ்ந்த அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.
15) எவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.
16) எவர் அல்லாஹ்வின் வழியில் ஏதாவது ஒன்றை செலவிடுவாரோ அவருக்கு எழு நூறு மடங்கு நன்மைகளை அல்லாஹ் எழுதி விடுகின்றான்.
17) அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்றால் அல்லாஹ் எழு நூறு வருட தொலைவுக்கு அவரது முகத்தை நரகை விட்டு தூரப்படுத்துவான்.
18) எவர் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து தொழுகையையும், நிரை வேற்றி, ஜனாஸாவை அடக்கும் வரை இருப்பாரோ அவர் இரண்டு கீராத் நன்மைகளை பெற்றவராக திரும்புவார். (கீராத் என்பது உஹத் மலைக்கு சமமாகும்).
19) ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று அதை அடக்கம் செய்வதற்கு முன் திரும்புவாரென்றால், அவர் ஒரு கீராத் அளவு நன்மைகளை பெற்று திரும்புகிறார்.
20) ஒரு முஸ்லிமை நோய் விசாரிக்கச் சென்றால் அவர் தீரும்பும் வரை சுவர்க்கத்தின் ஒரு இறக்கையில் இருக்கின்றார்.
21) எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு ஜனாஸாவில் கலந்து, ஒரு ஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்) அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.
22) யார் கல்வியை கற்பதற்காக வெளியேறிச் செல்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பாதையை இழகு படுத்துகின்றான்.
23) ஒரு முஸ்லிமுக்கு துன்பம் ஏற்படும் போது ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்ஃஜுர்னீ பீஃ முஸீபதி வஹ்லுஃப் லீ ஹயிரம் மின்ஹா’ அல்லாஹ் அவரது துன்பத்திற்கு நற்கூலி வழங்குவதோடு, அவரது துன்பத்தையும் மாற்றி அதை விட சிறந்ததை வழங்குவான்.
24) எவர் ஒருவர் அழகான முறையில் ஒழுச் செய்வாரோ, அவரது பாவங்கள் அவரது உடலை விட்டு வெளியேறும், நகத்தின் கீழிருந்து நிகழ்ந்த பாவங்கள் உட்பட.
25) ஒரு முஸ்லிமின் சோதனையை எவர் இந்த உலகில் போக்குவாரோ, அவரது துன்பத்தை அல்லாஹ் மறுமையில் நீக்குவான்.
26) எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவரது குறையை நாளை மறுமையில் மறைப்பான்.
27) எவர் ஒருவரின் கடனை இழகு படுத்துகின்றாரோ, அல்லது அதை தல்லுபடி செய்கின்றாரோ நிழலே இல்லாத நாளை மறுமையில் அல்லாஹ் அர்ஷின் கீழ் அவருக்கு நிழல் வழங்குவான்.
28) எவர் ஒழுச் செய்ததன் பின் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு’ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.
29) எவர் நேர் வழியின் பால் அழைப்பு விடுப்பாரோ அவரை பின் பற்றியவர்களின் கூலி இவருக்கு உண்டு, அவர்களது கூலியில் எதுவும் குறைக்கப்பட மாட்டாது.
30) நன்மையை எதிர்ப்பார்த்து தனது குடும்பத்துக்கு எவர் செலவளிப்பாரோ அவருக்கு தர்மத்தின் நன்மை உண்டு.-


ஆக்கம் : முஹம்மத் அப்து ரப்புஹு

தமிழாக்கம் : முஹம்மத் அஸ்ஹர் முஹம்மத் யூசுப்


நன்றி:
- sams

டாட்டா நானோவுக்கு போட்டியாக புதிய வாகனம்

குறைவான பெட்ரோல் நிறைவான மைலேஜ்.



உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப் படுகிறது

சனி, 2 மே, 2009

உலகின் இரண்டாவது மிகப் பெரிய தேர்தல்

நிஜங்கள்க செய்திப்பக்கம் 2 மே - 2009


பாராளுமன்றத்தேர்தல் 2009உங்கள் ஓட்டு!!?


அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியதேசத்தை வழி நடத்தி வெற்றிப்பாதையில்பயணிக்க வைக்கக்கூடிய கூட்டணியைஒட்டுமொத்த இந்திய குடிமக்களும்தீர்மானிக்க வேண்டிய காலகட்டம்.நாட்டுமக்களின் தேவைகளை சேவையாய்நிறைவேற்றித் தரக்கூடிய எம்.பிகளையும்,மந்திரிகளையும் தேர்ந்தெடுக்க ஒவ்வொருகுடிமகனுக்கும் கொடுக்கப்படும் வாய்ப்புநிறைந்த தேர்தல் நேரமிது.
ஓட்டுப்பெட்டிகளிலும், ஓட்டுச்சாவடிகளிலும்உள்ள ஓட்டைகளை அடைத்து பலத்தபாதுகாப்புகளுக்கு இடையே தேர்தலைஅசம்பாவிதங்கள் எதுவும் நிகழ்ந்துவிடாமல்நடத்தி முடிக்க வேண்டும் என்ற பயம்கலந்த எதிர்பார்ப்புகளுடன் அரசின்அனைத்து துறைகளும் இரவு பகலாய்பணிகளை செய்ய ஏவப்பட்டுள்ளன..!
ஒவ்வொரு கட்சியும் தங்களின்செல்வாக்கு மிகுந்த கோட்டைகளாககாட்சிதரும் தொகுதிகளைதொலைத்துவிடாமல் இருப்பதற்கு படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்ததேர்தல் வெற்றியோடு விடைபெற்று வீதிக்கேவராத வேட்பாளர்கள் முதல் அதிகாரத்திற்குஆசைபடும் புதிய வேட்பாளர்கள்வரை கூரைவீடுவரை வந்து கூழை கும்பிடுயிட்டு ஒருஓட்டிலாவது ஜெயிக்கவேண்டும் என்றகனவுகளோடு தனது ஆள், பண பலத்தைஅள்ளி வீசி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துஆ(ட்)டி பார்க்க அலை மோதிக்கொள்கிறார்கள்..!
தேர்தலுக்காக இந்திய அரசியல்சட்டத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டசெலவுத்தொகை 30 கோடிகளாகும்!.இந்தியத் தேர்தல்களை ஐரோப்பியநாடுகளில் நடைபெறுகின்ற நாடாளுமன்றதேர்தல்களோடு ஒப்பிடும் போது உலகின்இரண்டாவது பெரிய தேர்தலாககருதப்படுகிறது. மக்களின் வரிப்பணத்தில்கோடிகளை முடக்கி நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த தேர்தல்களில்தான்நமது தேசம் காக்க போட்டியிடும்தலைவர்களின் பிரச்சார யுக்திகள் இப்படிஇருக்கின்றன.
நாட்டின் பிரதம வேட்பாளர்கள்முதல், புதிய வேட்பாளர்கள் வரைஅனைவரும் மக்களின் தேவை, நாட்டின்வளர்ச்சி, எதிர்கால திட்டம் நாட்டில் எங்கும்பரவிவரும் பட்டினிச்சாவு, கல்வியின்மை,வறுமை, வேலையின்மை, சீர்கெட்டு வரும்கலாச்சாரம், சுகாதாரம், இந்தியகுடிமகன்களின் மேல் சுமத்தப்பட்டுள்ளகடன்கள் போன்றவற்றை தீர்ப்பதற்குண்டானதிட்டங்களைக் கூறி பிரச்சாரம் செய்வதைவிட எதிர் கூட்டணி வேட்பாளர்களைவிமர்சித்து பிரச்சாரம் செய்வதையேவாழையடி வாழையாக செய்து வருகின்றன.
நாட்டின் மூன்றாவது து}ண் எனவர்ணிக்கப்படும் பத்திரிக்கைத் துறையோஅரசியல் வாதிகளின் சுயரூபங்களைஅம்பலப்படுத்தி அடுத்து ஆளவருபவர்களைஅடையாளம் காண உதவ வேண்டியவர்கள்அவர்களின் அடிவருடிகளாகவேமாறிப்போயின. அவர் பலகீனமானவர், இவர்இரும்பு மனிதர், அவர் வெளிநாட்டைசார்ந்தவர், பாபர் மசூதியை இடித்தவர்கள்,ராமர் பாலம் காத்தவர்கள், அணுசக்தியைஆதரித்தவர்கள், எதிர்த்தவர்கள்,ஈழத்திற்காக குரல் கொடுத்தவர்கள்,சிறுபான்மையின் பாதுகாவலர்,பெரும்பான்மையின் கதாநாயகன். என்றுகருவாட்டுக்கடை சந்தையாய் காட்டுக்கூச்சலிடும் இவர்களின் அதிகார போதைதலைக்கேரி கையை வெட்டு, ரோடுரோலரால் நசுக்கு என்ற கொலை வெறிப்பேச்சுக்களைத்தான் பிரச்சாரத்தின் முக்கியசாராம்சமாக காண முடிகிறது.
தேசத்தின் உச்சபட்சசட்டத்தொகுப்பே இந்திய அரசியலமைப்புசட்டமாகும். அதனை நவம்பர் 26, 1949ல்அறிமுகப்படுத்தப்பட்டு ஜனவரி 26, 1950 முதல்நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது. இதன்நோக்கம் இந்தியாவின் அடிப்படை அரசியல்கொள்கைகள், கட்டமைப்பு அதிகாரங்கள்,மற்றும் அரசின் கடமைகளை நிர்ணயம்செய்து அதன் மூலம் நாட்டில் வாழும்ஒவ்வொரு குடிமகனுக்கும் சமமானஅடிப்படை உரிமைகளை வழங்கவேண்டும்என்பதே. இதன் காரணமாகவே நமதுதேசம் வேற்றுமையில் ஒற்றுமை கொண்டஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவிளங்குகிறது. இதற்கு வலு சேர்க்கும்விதமாக 1976-ல் நடைபெற்ற அரசியலமைப்புச்சட்ட திருத்தங்களில் இந்தியா கடைபிடிக்கும்மூன்று முக்கியக் கொள்கைகளாகபொதுவுடைமை, சமயசார்பின்மை, மற்றும்நேர்மை ஆகியவற்றை அறிவித்தது.சட்டங்களை இயற்றும் சபைக்குசெல்லத்துடிக்கும் இன்றைய அரசியல்கட்சிகள் நாட்டின் உயிரான இந்த மூன்றுகொள்கைகளையும் சட்டக்கிடங்கிலேயேசாவடித்து வைத்துள்ளனர். அதுமட்டுமின்றிஅந்தக் கொள்கைகளுக்கு நேரெதிர்செயல்பாடுகளை அரங்கேற்றுவதில் போட்டிபோட்டு முன் நிற்பதை காணமுடிகிறது.
சுதேசி பற்றி பேசும் பி.ஜே.பி-யினர்தான்பொதுவுடைமையை தனியார் மயமாக்கஅருண்சோரி தலைமையில் ஒருஅமைச்சரவையையே உருவாக்கி நாட்டுமக்களை அதிரவைத்தனர். அதன் மூலம்பொதுவுடைமை விற்பனை நிலையத்தைதிறந்து வைத்து ஏலம் விட்டபெருமைக்குரியவர்கள். இதில் தான்லாபத்தைக் கொட்டிக் கொடுத்துக்கொண்டிருந்த பி.எஸ்.என்.எல். கூடதனியார் மயமானது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து ஆட்சியைத்தொடரவந்த காங்கிரஸ{ம் தனது பங்கிற்குஎல்.ஐ.சி, ஸ்டேட் பேங்க், தேசியஇன்சூரன்ஸ் போன்ற நிறுவனங்களையும்மற்றும் அரசிற்கு இலாபம் தரும் இதரநிறுவனங்களையும் பங்குச் சந்தைநிறுவனத்தில் பணையம் வைத்த பெறுமைகாந்திய வாதிகளையே சாரும்.சமயசார்பின்மை என்ற தேசத்தின்இரண்டாவது கொள்கைக்கு நேர் எதிர்கொள்கையையே தனது கொள்கையாககொண்டு களமிறங்கியவர்கள் பி.ஜே.பிவகையராக்கள். அதனை மேலும்உண்மைபடுத்தும் வண்ணம் தற்போதையதேர்தலில் அக்கட்சியின் வாக்குறுதியில்முதன்மையாக பாபர் மசூதியை இடித்தஇடத்தில் ராமர் கோயில் கட்டியே தீருவோம்என்று இந்தியாவின் இறையாண்மைக்குஎதிராக பகிரங்கமாக அறிவித்து தனதுஇந்துத்துவா காவிச் சாயத்தை மதப்பற்றாகமாற்ற முயற்சிக்கிறார்கள்.
இந்த விஷயத்தில்காங்கிரசும் விதிவிலக்கல்ல.தனது ஓட்டு வங்கி பாதித்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களும்இதனை நாட்டின் இறையாண்மைவிஷயமாகப் பார்க்காமல் சமயம் சார்ந்தவிஷயமாக கருதுவதால்தான் இதுவரைஅதனை தீர்ப்பு எழுதாத பிரச்சினையாகஇழுத்துச் செல்கிறார்கள். இதில் இன்னும்கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்முதலில் சர்ச்சைக்குரிய இடம் என்றுசொல்லியும், எழுதியும் வந்த ஊடகங்கள்ஆண்டுகள் நகர நகர ராமர்கோயில் என்றேஎழுதத் தொடங்கிவிட்டன. இப்போதுசர்ச்சைக்குரிய இடம் என்பது ஊடகங்களில்மறைந்தே போனது.
நாட்டின் பாதுகாப்பு சக்தியாகவிளங்கும் ராணுவத்திற்கு வாங்கியஆயுதங்கள், கருவிகள்,போர்த்தளவாடங்கள், அரசு கட்டிடங்கள்என அனைத்திற்கும் ராமாயண,மகாபாரதத்திலிருந்த சமஸ்கிருதப் பெயர்களேவைக்கப்படுகின்றன. உதாரணமாகரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்ட டீ-90 ரக போர்டாங்குகளுக்கு பீஷ்மர் என்று பெயர்வைத்தார்கள். அரசு அலுவலகங்களில்வெள்ளிக்கிழமைகளில் பஜனைகள்ஒலிக்கின்றன. சமீப காலமாக ஆயுதபூஜைகள் அரசு விழாக்களைப் போல்கொண்டாடப்படுகிறது. எங்கே இருக்கிறதுமதச்சார்பின்மை? நாட்டையே நாசப்படுத்திக்கொண்டிருக்கும் இந்த நோய் தற்போதுநீதித்துறை வரை தனது பிடியைநீட்டியுள்ளது.
ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி பகவத்கீதைதான் நாட்டின் தர்ம நியாயச் சட்டமாகஇருக்க வேண்டும் என்று கொக்கரிக்கிறார்.கருப்புக் கோட்டுக்குள் காவியைக் கொண்டமார்கண்டேய கட்ஜீ தாடியும், பர்தாவும்தாலிபனிஸம் என பரபரப்பு தீர்ப்பளித்துதனது அரிப்பைத் தீர்த்துக் கொண்டார்.தாடியை வம்புக்கு இழுத்து சீக்கியமக்களையும் சிக்கலில் மாட்டிவிட்டுள்ளார்.இப்படியாக நாட்டின் மதச்சார்பின்மைஎன்பது எல்லா நிலையிலும், துறையிலும்மண்ணறையை நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருக்கிறது.
அரசியல் சட்டத்தொகுப்பில்மூன்றாவது கொள்கையாக உள்ள 'நேர்மை"அரசியல் வாதிகளின் அகராதியிலேயேஇல்லாத ஒரு வார்த்தையாக அவர்களுக்குதெரிகிறது. தேர்தல் நேரங்களில் கரைபடாதகரத்திற்கு சொந்தக்காரர்களாக வலம் வரும்இவர்கள் தெருக்கோடியில் இருந்துபலகோடிகளுக்கு அதிபதிகளாக தங்களைமாற்றியதை மக்கள் மறக்கமாட்டார்கள்.இன்றைய தினம் நேர்மையான ஒருதலைவரை காட்டுங்கள் என்றால் அவர்கள்கல்லறைக்குதான் அழைத்துப் போவார்களேதவிர தனித்துவமிக்க தலைவரை காண்பதுஎன்பது மிகவும் அரிதான விசயமாகவேமாறிப்போனது. அதனால் தான் நடைமுறைவாழ்க்கை ஓட்டத்தில் எதையாவது மாற்றிப்பேசினால் அல்லது திரித்து கூறினால்எதிர்காலத்தில் அரசியல் தலைவராகிவிடுவாய்என்று கேலி செய்யும் அளவிற்கு இன்றையஇந்திய அரசியலின் நிலைமை உள்ளது.இன்றைய அரசியல் கட்சிகளின்நேர்மையை பட்டியல் போட்டால் அதுநிஜங்களாய் நீண்டு கொண்டே போகுமேஅல்லாது நிறுத்த முடியாது. ஆனாலும் ஓரிருவிஷயங்களையாவது உரசிப் பார்த்தேஆகவேண்டும். மேற்கத்திய கலாச்சாரம்இந்திய கலாச்சாரத்தை சீரழிப்பதிலிருந்துகாக்க புறப்பட்டதாக காட்டிக்கொள்ளும்சங்பரிவாரத்தின் குழந்தை பி.ஜே.பி.யின்எம்.பி. பாபுபாய் கத்தாரா அடுத்தவன்மனைவியை தன் மனைவி என்று கூறிவெளிநாட்டுக்கு அழைத்துப்போக முயன்றநேர்மைவாதி. கிலோ கணக்கில் போதைபொருளோடு பிடிபட்ட ராகுல் மஹாஜன்,ஒரிசாவில் பாதிரியார்களை உயிரோடுஎரித்தவர்கள், குஜராத்தில் ஒருசமூகத்தையே திட்டமிட்டு கொன்றகொலைகார கும்பல். குஜராத்தைப் பற்றியநாடாளுமன்ற விவாதத்தின் போதுபி.ஜே.பி.யின் இராணுவ அமைச்சர் ஜார்ஜ்பெர்ணான்ட்ஸ் 50 ஆண்டுகளில் நடக்காததாநடந்து விட்டது. இதனைப் பற்றி பேசி நமதுநேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றுநஞ்சைகக்கிய நேர்மைவாதி. அதுமட்டுமின்றிஇந்தியாவில் முதன்முதலில் அரசியல்தலைவர் மீதான படுகொலை தாக்குதல்நடத்திய பெருமை பி.ஜே.பியின் தலைமைபீடமான ஆர்.எஸ்.எஸ்-யையே சாரும்.தேசத்தின் தந்தையென போற்றப்படும்காந்தியை முஸ்லிம் வேடமணிந்து கொன்றகோட்சேயின் வாரிசுகள்தான் இவர்கள்.இதன்மூலம் இந்து, முஸ்லிம் ஒற்றுமையைகுலைக்கக் கூடிய சதித்திட்டத்தை 1948ஜனவரி-30லேயே அறங்கேற்றியநேர்மைவாதிகள்.
காங்கிரசோ.. இந்தியா கண்ட முதல்பிரதமர் நேரு கொண்டு வந்த அணிசேராகொள்கைக்கு எதிராக அமெரிக்கா அணிகள்கொண்டுவந்த ஈரானுக்கு எதிரானபொருளாதார தடைக்கு தோள் கொடுத்துஆதரவு கையொப்பமிட்டு தனது நேர்மையைநிலைநாட்டியவர்கள். அணுசக்தி ஒப்பந்தம்என்ற அமெரிக்க அடிமைசாசனத்திற்குகையெழுத்து போட்டு நிறைவேற்றியவர்கள்.இவர்களும் பி.ஜே.பிக்கு சற்றும்சளைத்தவர்களல்ல என்பதை 1984ல்அக்டோபர் 31 இந்திராகாந்தி படுகொலைக்குபகரமாக சீக்கியர்களுக்கு எதிரானகொலைவெறித் தாண்டவத்தை முன்னின்றுநடத்திய நேர்மைவாதிகள். சமீபத்தில்இஸ்ரேலிடமிருந்து ஆயுதம் வாங்கியதில்630கோடி லஞ்சம் வாங்கிய வழக்குபாதுகாப்பு அமைச்சர் மீது பாய்ந்துள்ளது.உழுபவனுக்கு நிலம் என்றகோசத்தை முன்வைத்து உழுபவர்களின்உழைப்பில் வளர்ந்த கம்யூனிஸ்ட் மேற்குவங்கத்தில் முதலாளித்துவத்திற்கு ஆதரவாகநானோகார் தொழிற்சாலைக்காக சிங்கூரிர்விவசாயிகளிடம் விளைநிலத்தை பிடுங்கிபிரச்சனை ஏற்படுத்திய நேர்மைவாதிகள்.அது போன்றே நத்தி-கில் சுவர்கோ மகன்சலீம் குரூப் இரும்பு ஆலை திறப்பதற்காகவிவசாயிகளின் நிலத்தை அபகரித்தநேர்மைவாதிகள். தேசியக் கட்சியானாலும்,மாநிலக் கட்சியானாலும் அரசியல் சட்டத்தின்முத்தாய்ப்பான இந்த மூன்றுகொள்கைகளையும் முடிந்தவரைபுறந்தள்ளியே செயல்படுகின்றன.ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயஇயக்கமும் முழங்காலிட்டு ஆதரவுகொடுக்கும்தி.மு.க அரசு அண்ணாவின் நினைவுநாளில்ஒரு முஸ்லிமும் விடுதலைஅடைந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும்கருத்துமாக இருந்து தனது நேர்மையைநிரூபித்தது. நவீன ஜா(டா)ன்சி ராணியானஜெயலலிதாவோ கரசேவைக்கு ஆள் அனுப்பிகாவிக்கு தனது நேர்மையை கடமையெனசெய்தது. ஒட்டுமொத்த அரசியல்கட்சிகளும்,தேசத்தின் கொள்கைக்கு கொடுத்தமுக்கியத்துவத்தை விவரித்துக் கொண்டேபோகலாம். ஆனாலும் நமது தேசம்மறப்போம்..மன்னிப்போம் என்ற அரசியல்கோசத்தையே தனது கோசமாககொண்டுள்ளதோ என்னவோ மீண்டும்அவர்களே ஆட்சியைப் பிடிக்க பள்ளிக்குழந்தைகள் ஆசிரியரிடம் கிள்ளிவிட்டான்,அடித்துவிட்டான் என்று புகார் செய்வதுபோன்று பலஹீனமானவர், பயங்கரமானவர்என்று மக்களின் முன்னிலையில் ஒருமாயத்தோற்றத்தை உருவாக்கிமக்களவையை நிரப்ப நிற்கிறார்கள்.மக்களோ ஒவ்வொரு தவறுக்கு பிறகும்நிகழும் அடுத்த பெரிய ஊழலோ, குண்டுவெடிப்போ, ஒப்பந்தமோ, கலவரமோ வந்துவிட்டால் முந்தைய நிகழ்வுகளை நினைத்துக்கூடப்பார்ப்பதில்லை.இதுவரை மேலே பார்த்து வந்தநிகழ்வுகள் எல்லாம் எல்லாநடுநிலையாளர்களும் கண்டித்ததும்நடக்கத்தான் செய்தது. ஆனாலும் தேர்தல்களம் வரும் போது வேறென்ன செய்யமுடியும். யாருக்காவது ஓட்டுப்போட்டுத்தானே ஆக வேண்டியுள்ளது என்றுஅப்போதைக்கு அவர்களில் யார்மதசார்பின்மையோ, யார் தனக்கு இடஒதுக்கீடோ, பண ஒதுக்கீடோ, சீட்ஒதுக்கீடோ தருகிறார்களோ அவர்களைதேர்ந்தெடுக்க வேண்டிய காலக்கட்டாயம்வந்துள்ளது.
தேசத்தின் அடிப்படை அரசியல்கொள்கையை நடைமுறைப்படுத்தமுடியாதவர்கள் இன்று மக்கள் முன்னிலையில்வெளிநாட்டு வங்கி பணத்தை கொண்டுவருவோம். நாட்டை பயங்கர வாதத்தில்இருந்து பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தின்மூலம் தேசத்திற்கு எந்த பிரயோஜனமும்விளைந்து விடப்போவதில்லை.நாம் இயற்றிய சட்டங்களை நாமேநடைமுறைப்படுத்த முடியாத நிலைஇதைவிட அவமானம் இந்த தேசத்திற்குவேறென்ன இருக்க முடியும். தேர்தல்நிலைப்பாட்டில் முழு அதிகாரம் படைத்ததேர்தல் ஆணையமோ அதிகாரவர்க்கத்தின்ஆணைகளுக்கு முன்னால் பலஹீனப்பட்டுகிடக்கின்றது. எனவே எழுதப்பட்டசட்டங்களை நடைமுறைப்படுத்தி தேசத்தைவளர்ச்சிப்பாதையில் பயனிக்க வைக்கவேண்டிய மாற்றத்தை மக்களில் இருந்துதான்துவங்க வேண்டும். மக்களை சந்திக்காமல்யாரும் மக்களவைக்குள் போக முடியாது.எனவே இந்த தேசத்தின் நலன் ஜனங்களின்கைகளிலேயே உள்ளது கட்சிகளுக்குள்கட்டுண்டு இருக்காமல் தேசத்தின் நலம்பேண வேண்டியது ஒவ்வொரு இந்தியக்குடிமகனுக்கும் உள்ள பொறுப்பு ஆகவேஉங்கள் வாக்கை யார் உறுதியாகசட்டத்தைபின்பற்றி நடைமுறைப்படுத்துகிறார்களோ அவர்களையேதேர்ந்தெடுப்பதாய் அமைய வேண்டும்.மேற்சொன்ன அரசியல் சாசன சட்டத்தைநடைமுறைப் படுத்தாமையால் அதிகம்பாதிப்படைந்தவர்கள் சிறுபான்மைசமூகம்தான். எனவே முதலில் மாற்றத்திற்குவித்திட வேண்டியவர்கள் நீங்கள்தான்.ஆகவே இன்றைய சிறுபான்மை சமூகம்ஒன்றுபட்டு தேர்தல் களங்களை எதிர்கொள்ளக்கூடிய மாற்றம் வருமெனில் நீங்கள்ஆதரவு கொடுத்து வந்த நிலை மாறிஉங்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டுஆதரவை அல்ல கூட்டணியை கேட்டுவரக்கூடிய நிலை அருகிலேயே இருக்கிறதுஇன்ஷா அல்லாஹ்…
-அபு ஆஃபியா


நன்றி : நிஜங்கள்

இந்தியப் பிரதமர்களின் பட்டியல்



வ.எண். பெயர். மாநிலம் கட்சி பதவி ஏற்றது பதவிக்காலம் முடிவு
1 ஜவஹர்லால் நேரு உத்தரப்பிரதேசம் இந்திய தேசிய காங்கிரஸ் ஆகஸ்ட் 15, 1947 மே 27, 1964


2 குல்சாரிலால் நந்தா பஞ்சாப் (பாகிஸ்தான்) இந்திய தேசிய காங்கிரஸ் மே 27, 1964 ஜூன் 9, 1964


3 லால் பகது}ர் சாஸ்திரி உத்தரப்பிரதேசம் இந்திய தேசிய காங்கிரஸ் ஜூன் 9, 1964 ஜனவரி 11,
4 குல்சாரிலால் நந்தா பஞ்சாப் (பாகிஸ்தான்) இந்திய தேசிய காங்கிரஸ் ஜனவரி 11, 1966 ஜனவரி 24, 1966


5 இந்திரா காந்தி உத்தரப்பிரதேசம் காங்கிரஸ் (ஐ) ஜனவரி 24, 1966 மார்ச் 24, 1977
6 மொரார்ஜி தேசாய் மும்பை ஜனதா கட்சி மார்ச் 24, 1977 ஜூலை 15, 1979
7 சரண் சிங் உத்தரப்பிரதேசம் ஜனதா கட்சி ஜூலை 28, 1979 ஜனவரி 14, 1980
8 இந்திரா காந்தி உத்தரப்பிரதேசம் காங்கிரஸ் (ஐ) ஜனவரி 14, 1980 அக்டோபர் 31, 1984
9 ராஜூவ் காந்தி மும்பை காங்கிரஸ் (ஐ) அக்டோபர் 31, 1984 டிசம்பர் 2, 1989
10 வி.பி.சிங் உத்தரப்பிரதேசம் ஜனதா தளம் டிசம்பர் 2, 1989 நவம்பர் 10 1990
11 சந்திரசேகர் உத்தரப்பிரதேசம் ஜனதா கட்சி நவம்பர் 10 1990 ஜூன் 21, 1991
12 பி.வி. நரசிம்மராவ். ஆந்திரப்பிரதேசம் காங்கிரஸ் (ஐ) ஜூன் 21, 1991 மே 16, 1996
13 அடல் பிஹாரி வாஜ்பேய் மத்தியப்பிரதேசம் பாரதிய ஜனதா கட்சி மே 16, 1996 ஜூன் 1, 1996
14 தேவகவுடா கர்நாடகம் ஜனதா தளம் ஜூன் 1, 1996 ஏப்ரல் 21, 1997
15 ஐ.கே. குஜரால் பஞ்சாப் (பாகிஸ்தான்) ஜனதா தளம் ஏப்ரல் 21, 1997 மார்ச் 19, 1998
16 அடல் பிஹாரி வாஜ்பேய் மத்தியப்பிரதேசம் பாரதிய ஜனதா கட்சி மார்ச் 19, 1998 மே 22, 2004
17 மன்மோகன் சிங் பஞ்சாப் (பாகிஸ்தான்) இந்திய தேசிய காங்கிரஸ் மே 22, 2004 --


நன்றி : நிஜங்கள் மாத இதழ்

சொர்க்கம் செல்ல இலகுவான வழிகளில் ஒன்று

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...


,,, சொர்க்கம் செல்ல இலகுவான வழிகளில் ஒன்று எப்போது ஒலுச் செய்தாலும் இரண்டு ரகாத்துகள் தொழுவ‌தாகும். இந்த பழக்கத்தை கடைபிடித்தால் சொர்க்கம் செல்லும் வ‌ழி நம‌க்கு இலகுவாகும் என்பதைப் பின்வரும் நபிமொழி நமக்குத் தெளிவாக விளக்குகிறது.
ஒரு முஸ்லீம் அழ‌கிய‌ முறையில் உளுச் செய்து அக‌த்தையும் முக‌த்தையும் ஒருமுக‌ப்ப‌டுத்தித் தொழுதால் அவ‌ருக்குச் சொர்க்க‌ம் க‌ட்டாய‌மாகாம‌ல் இருப்ப‌தில்லை. என்று ந‌பிக‌ள் (ஸ‌ல்)அவ‌ர்க‌ள் கூறினார்க‌ள்.
‍ அறிவிப்பாளர் - உக்பா பின் ஆமிர் (ர‌லி) நூல் (முஸ்லீம் 397 )

இதே பழகத்தை இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து கடைபிடித்து வந்த பிலால் (ரலி) அவர்கள் சொர்கத்துக்குறியவர் என்று இவ்வுல‌கத்துலேயே நபிகளார் சுபச் செய்தி கூறியுள்ளார்கள்.

ஒரு ப‌ஜ்ருத் தொழுகையின் போது பிலால் ( ர‌லி) யிட‌ம், பிலாலே! இஸ்லாத்தில் இனைந்த‌பின் நீர் செய்த‌ சிற‌ந்த‌ அம‌ல் ப‌ற்றிக் கூறுவிராக‌. ஏனெனில் உம‌து செருப்போசையை சொர்க‌த்தில் நான் கேட்டேன் என்று ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் கேட்டார்க‌ள்.
அத‌ற்கு பிலால் (ர‌லி), இர‌விலோ ப‌க‌லிலோ நான் உளுச்செய்தால் அவ்வுளுவின் மூல‌ம் நான் தொழ‌ வேண்டும்மென்று நாடிய‌தைத் தொழாம‌ல் இருப்ப‌தில்லை. இதுதான் என‌து செய‌ல்க‌ளில் சிற‌ந்த‌ செய‌ல். என்று விடைய‌ளித்தார்க‌ள். அறிவிப்பாளர் அபுஹுரைரா (ர‌லி) நூல் (புஹாரி 1149)
மேலும் இறைவ‌னை வ‌ண‌ங்குவ‌த‌ற்காக‌ ஒருவ‌ர் ஒளுச் செய்யும் போது அவ‌ர் உறுப்புக‌ள் செய்த‌ பாவ‌ங்க‌ளும் ம‌ன்னிக்க‌ப் ப‌டுகின்ற‌ன‌.

ஒரு முஸ்லீமான‌ அல்ல‌து முஃமினான‌ அடியார் உளுச் செய்யும் போது முக‌த்தைக் க‌ழுவினால், க‌ண்க‌லால் பார்த்துச் செய்த‌ பாவ‌ங்க‌ள் அனைத்தும் ( முக‌த்தைக் க‌ழுவிய‌ ) நீருட‌ன் அல்ல‌து நீரின் க‌டைசித்துளியுட‌ன் முக‌த்திலிருந்து வெளியேறுகின்ற‌ன‌. அவ‌ர் கைக‌ளைக் க‌ழுவும்போது கைக‌ளால் ப‌ற்றிச் செய்த‌ பாவ‌ங்க‌ள் அனைத்தும் ( கைக‌ளைக் க‌ழுவிய‌) த‌ண்ணீருட‌ன் அல்ல‌து த‌ண்ணீரின் க‌டைசித்துளியுட‌ன் வெளியேருகின்ற‌ன‌.அவ‌ர் கால்க‌ளைக் க‌ழுவும்போது கால்க‌ளால் ந‌ட‌ந்து செய்த‌ பாவ‌ங்க‌ள் அனைத்தும் (கால்க‌ளைக் க‌ழுவிய‌ ) நீறோடு அல்ல‌து நீரின் க‌டைசித்துளியோடு வெளியேறுகின்ற‌ன‌.இறுதியில் அவ‌ர் பாவ‌ங்க‌ளில்லிருந்து தூய்மை அடைந்த‌வ‌ராக‌ (அந்த‌ இட‌த்திலிருந்து) செல்கிறார் என்று ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் கூறினார்க‌ள்.
அறிவிப்பாள‌ர் அபுஹூரைரா (ர‌லி) நூல்(முஸ்லீம் 412)

ஒரு மனிதன் ஒவ்வொரு உளுவின் போதும் தொழுகையைக் கடைபிடித்து வந்தால் அவரிடம நற்செயல்கள் குடிகொள்வதுடன் தீய செயல்களும் அவறைவிட்டு அகன்றுவிடும். இது தொழுகையைப் பின்பற்றுவதால் ஏற்படும் கிடைக்கும் நன்மை என்று அல்லாஹ் கூறியுள்ளான்.

தொழுகையை நிலைநாட்டுவிராக !. தொழுகை வெட்கக் கேடான காரியங்களைவிட்டும் தீமையைவிட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 29.45)

ஒவ்வொரு ஒளுவின்போது இரண்டு ரகாத் தொழுவது கடுமையான காரியம் ஒன்றும் இல்லை. கொஞ்சம் முயற்ச்சி செய்தால் சாதாரணமாக செய்து விடலாம்.

இதை அற்பமான காரியமாக நினைத்து விட்டுவிடாமல் ஒவ்வொரு உளுவின்போதும் குறைந்த பட்ச்சம் இரண்டு ரகாத்துகளாவது தொழும் பழகத்தை தொடர்ந்து கடைப்பிடித்து சொர்கத்துக்கு செல்லும் வழிகளை இலகுவாக்குவோம். இன்ஷாஅல்லாஹ்.

நன்றி: தீன்குலப்பெண்மணி மாத இதழ்

வியாழன், 30 ஏப்ரல், 2009

நல்ல நபி மொழிகள்



As I received...

உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?


தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)


அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?


யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)


உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?


யார் ஒரு நாளில் நூறு தடவை


سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ


சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)


உங்களுக்கும் நரகத்துக்கும் மத்தியில் நாற்பது ஆண்டுகள் துலை தூரம் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?


யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ, அல்லாஹ் அவரை நாற்பது ஆண்டுகள் தொலை தூரம் நரகத்திலிருந்து தூரமாக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)


அல்லாஹ் உங்கள் மீது, அருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?


யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)


அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?


யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)


அல்லாஹ்விற்கு சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா?


ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)


ஹஜ் செய்த நன்மையைபெற விரும்புகின்றீர்களா?


ரமளான் மாத்தில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு சமமாகும் அல்லது என்னுடன் ஹஜ் செய்ததற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)


சுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றீர்களா?


அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற (வீட்டை) சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)


அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புகின்றீர்களா?


ஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும், ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ் பொருந்திக் கொள்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.. (முஸ்லிம்)


உங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?


பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)


ஒரு வருடம் முழுமையாக நோன்பு நோற்ற நன்மை கிடைக்க வேன்டுமென விரும்புகின்றீர்களா?


ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, வருடமெல்லாம் நோன்பு நோற்பதற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)


மலையளவு நன்மை கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?


ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்படும் வரை அந்த ஜனாஸாவில் யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத்து நன்மையும், அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கிராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. இரு பெரும் மலை அளவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)


சுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா?


நானும் அனாதையை பொறுப்பெடுப்பவரும் இவ்வாறு சுவர்க்கத்தில் இருப்போம் என, நபி(ஸல்) அவர்கள் தனது நடு விரலையும் ஆள்க்காட்டி விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (புகாரி)


அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போராளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது விடாமல் தொடர்ந்து நோன்பு நோற்கும் நோன்பாளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது இரவெல்லாம் நின்று வணங்கும் வணக்கதாரியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா?


விதவைக்கும் மிஸ்கீனுக்கும் உதவி செய்பவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவரைப் போன்றவராவார், இப்படியும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எண்ணுகின்றேன், அதாவது இரவெல்லாம் நின்று வணங்குபவரைப் போன்றும் விடாமல் நோன்பு நோற்பவரைப் போன்றும் என்று.(அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகம்) (புகாரி, முஸ்லிம்)


நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா?


யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)


மரணத்துக்குப் பின்னும், உங்களின் நன்மைத்தட்டில், நன்மை எழுதப்பட வேண்டுமா?


ஒரு மனிதன் மரணித்தால் மூன்றைத்தவிர மற்ற எல்லா அமல்களும் துண்டித்து விடும், நிரந்தர தர்மம், பிரயோஜனம் உள்ள அறிவு, தனக்காக பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான பிள்ளை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)


சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என விரும்புகின்றீர்களா?


لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله


லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று கூறுவது சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)


முழு இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?


யார் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும், யார் சுப்ஹுத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு முழு இரவும் நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)


ஒரு நிமிடத்தில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீகளா?


சூரத்துல் இக்லாஸை ஒரு தடவை ஓதுவது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)


உங்களின் நன்மைத் தராசு, அதிகம் இடையுள்ளதாக ஆக வேண்டும் என விரும்புகின்றிர்களா?


இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை)


سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم


சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)


கோபம் என்றால் என்ன?

கோபம்'

கோபம்' என்பது மனிதர்களுக்கிடையே தோன்றும் கடுமையான உணர்ச்சியாகும். இது சிறிய எரிச்சல் அளவில் இருந்து கடுமையான வெறிகொண்டதாக இருக்கலாம்.


கோபம் ஏற்படும்போது உடலளவில் அதிக இரத்த அழுத்தம் வேகமான இதயத்துடிப்பு, அட்ரீனாலின்(adrenaline)நோராட்ரீனலின்(noradrenaline)அதிகம் சுரக்கலாம்.


வேண்டாமே கோபம் !


கோபம் எதனால் வருகிறது? கோபம் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? நாம் கோபப்படுவதைப்போல் பிறர் நம்மிடம் கோபம் கொண்டால் விளைவுகள் என்ன? ஒரு மனிதன் சிறிதளவு கால அவகாசம் ஒதுக்கி தனிமையில் மேற்கண்ட கோபம் குறித்த கேள்விகளுக்கு விடைகளை சிந்தித் துப் பார்த்தால், தான் கோபம் கொள்ளநேரிடும் அனேக சூழ்நிலை களைத் தவிர்க்கலாம். தனக்குத் தானே கட்டளையிடும் `ஆட்டோ சஜசன்’ என்ற முறையில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில்“நான் ஒருபோதும் எவரிடத்தும் கோபம் கொள்ளமாட்டேன்.மனமே எதை நினைத்தும் கோபம் கொள்ளாதே” என்று சங்கல்பத்தை குறைந்தது 10 தடவை தன் மனதிற்குள் சொல்ல வேண்டும்.ஓரிரு மாதங்கள் கழித்து தனது கோபப் படும் குணத்தை ஆராய்ந்து பார்த்தால் கண்டிப்பாக கோபம் கொள்ளும் தன்மை குறைந்து வரும். கணவன் மனைவியிடையே ஒருபோதும் எந்த ஒரு செயல் நிமித்தமும் கோபம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதோடு, கனிவான முறையில் பேசிப்பழகிட வேண்டும். கோபம் கொள்ளும் செயல் என்று ஒருசெயலை அல்லது ஒரு நிகழ்வினைக் கூட சுட்டிக் காட்டுதல் கூடாது.கோபம் கொள்ளும் தன்மை எவர் ஒருவரி டம் அறவே இல்லையோ, அவரை குடும்ப மும், சுற்றத்தாரும் ஏன்? இந்த சமுதாயமே இனிய மனிதராக ஏற்றுக் கொள்ளும். அதன் மூலமே நாம் பல்வகையான பயன் களை அடைந்து வாழ்வில் ஏற்றம் பல பெறலாம்.